Thursday, August 29, 2019

பொதுஜன பெரமுனவின் அங்கத்துவம் பெற்ற எஸ்.பீ - டிலான் இருவருக்கும் வந்த வினை.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திசாநாயக்க, டிலான் பெரேரா இருவருக்கும் அவ்வாறு அங்கத்துவம் பெறும்போது சமுகமளித்திருந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் அங்கத்துவத்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவுசெய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிரி ஜயசேக்கர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர உள்ளிட்ட கட்சியின் முக்கியத்தர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடிய போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் அவர்கள் அங்கத்துவம் பெறும்போது அங்கு சமுகமளித்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக மிக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வீரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். .

No comments:

Post a Comment