Saturday, August 10, 2019

'சோபா' வந்தால் இராணுவத்தினரின் எதிர்ப்பும் தலைகாட்டும்! - பாராளுமன்றில் அபாய எச்சரிக்கை

வெளிநாடுகள் அல்லது வெளிநாட்டு அமைப்புக்களுடன் எமது நாடு மேற்கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு உடன்படாமல், அதனை கால நீடிப்புச் செய்வது தொடர்பான பிரேரணையொன்று நேற்று (09) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார். எக்ஸா மற்றும் சோபா உடன்படிக்கை தொடர்பாகவும், அமெரிக்காவுடன் ஏற்படுத்தவுள்ள மிலேனியம் செலேன்ஞ் கோபரேஷன் உடன்படிக்கை தொடர்பாகவும் இங்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கப் படைகளுக்கு இலங்கையில், இலங்கையின் சட்டங்களுக்குப் புறம்பாக அவர்களின் சட்டத்திற்கு ஏற்றாற்போல நடாத்தப்படவுள்ள விடயங்களும் இந்த உடன்படிக்கைகளில் உள்ளடங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விவாதத்தில் பங்குபற்றி, அரச அதிகாரமும் இராணுவ அதிகாரத்தினுள் உள்ளடங்கியிருப்பதாகவும், மற்றுமொரு அரசாங்கத்தின் இராணுவத்தினர் இந்நாட்டுச் சட்டத்திற்கு உடன்படாமல் சுதந்திரமாக தங்களுக்கு ஏற்றாற்போல நடப்பதற்கு இடமளிப்பது பெரும் பிளவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment