Thursday, August 15, 2019

பாதாள குழுத்தலைவன் உட்பட இருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை. JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது.

கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (15) மாலை 4.15 மணியளவில் இரு முச்சக்கர வண்டிகளில் வந்த இரு குழுக்களினால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடுத்த முச்சக்கர வண்டியில் வந்த இருவரை மன்னா கத்திகளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினரான ஆனமாலு ரங்க என்பவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment