Wednesday, August 7, 2019

தனிப்பட்ட முறையில் யாரும் கோத்தாவைச் சந்திக்க மாட்டோம் என்கின்றது ஐதேக

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

பொதுசன முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகராக கோத்தபாய ராஜபக்ஷவை முன்னிறுத்துவது மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹஷீம் மற்றும்அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் நேற்று முன்தினம் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துத் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியமை போன்றன தொடர்பில் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளமையும் இதற்குக் காரணமாகவுள்ளது.

அதனால் இச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட முறையில் கோத்தபாய ராஜபக்ஷவை யாரும் சந்திப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

No comments:

Post a Comment