Thursday, August 15, 2019

தாமரை மொட்டை கையிலெடுத்ததால் மஹிந்தரின் எதிர்கட்சி தலைமை பதவி கேள்விக்குள்ளாகின்றது.

மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றதனால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்க முடியுமா? என சபாநாயகர் பாராளுமன்றில் தெளிவுறுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சென்ற ஞாயிற்றுக் கிழமை பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார் எனவும், மகிந்த பாராளுமன்றத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தே வந்ததாகவும், முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

அவ்வாறான வேறொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட அவர், மேலும் பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைமையை ஏற்பது ஏற்புடையதுதானா என்பது தொடர்பிலும் சபாநாயகர் பாராளுமன்றில் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment