Saturday, August 31, 2019

ஹக்கீம், ரிஷாத், பாட்டாலி, மனோ ஒத்துழைப்பு சஜித்துக்கே...!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரை நியமிப்பதற்கு, ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது என அமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகின்றார்.

அதற்கேற்ப, ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், பாட்டாலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேஷன் உள்ளிட்ட தலைவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு தங்களது ஆதரவு கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்ததும், சஜித் பிரேமதாசாவுக்கான ஆதரவுக்காக கட்சியைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றிணைத்துக் கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் எதிர்வரும் நாட்களில் கலந்தாலோசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment