Tuesday, August 6, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் எடுபிடி என்பதை தெரிவுக்குழுவில் நிரூபித்த சுமந்திரன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்சி நிரலில் செயற்படுகின்றார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அரசியல் அரங்கில் இடம்பெறும் சகல நகர்வுகளையும் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்தே நகர்த்திக்கொண்டிருக்கின்றார் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிருபணமாகியுள்ளது.

21.04 தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அங்கத்தினரான சுமந்திரன் அங்கும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவே செயற்பட்டுவருவது அவர் பீல்ட மார்ஸ்ல் பொன்சேகாவுடன் பகிரங்கமாக முரண்பட்டதன் ஊடாக மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் தெரிவுக்குழு முன்னிலையில் இரண்டாவது தடவையாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சாட்சியமளிக்கும்போது, அவரிடம் கேள்விகளை தொடுத்த சரத் பொன்சேகா, „இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றுமுழுதாக ஒழித்துவிட்டதாக கூற முடியாது என்ற தங்களது கருத்தில்தான் நாங்களும் இருக்கின்றோம்' என்றார். அதன்போது குறிக்கிட்ட சுமந்திரன் „அது பீல்ட் மார்ஸல் பொன்சேகா அவர்களது கருத்து' என்றார். அவ்வாறாயின் „உங்களது கருத்து இஸ்லாமிய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதா' என சரத் பொன்சேகா கேட்டபோது, „உங்களுக்கு நான் பதிலளிக்கவேண்டியதில்லை' என பதிலளித்து மூக்குடைபட்டார் சுமந்திரன். இதன்போது தெரிவுக்குழுவினர் மிகுந்த சங்கடத்திற்குளானதையும் இருவரையும் சமாதானப்படுத்த தலைவர் ஜயம்பதி விக்கிரமரட்ண சிரமப்பட்டதையும் உணர முடிகின்றது.

ஏப்ரல் 21 இடம்பெற்ற சம்பவமானது தற்செயலானது என்றும் அதனை தாம் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று மார்தட்டுகின்றது ஐக்கிய தேசியக் கட்சி. ஆனால் எதிர்கட்சிகள் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள், இஸ்லாமிய பயங்கரவாதத்தால் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் உண்டு அவதானம் வேண்டும் என்று கூறப்படுகின்றது. அவ்வாறான நிலைப்பாட்டில் சரத் பொன்சேகா தனது கருத்தை தெரிவித்தபோது குறுக்கிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தினை முன்வைத்த சுமந்திரன் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எடுபிடியாகவே செயற்படுகின்றனே; என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment