Saturday, August 10, 2019

நீதிமன்றை அவமதித்து தலைமறைவாகியுள்ள ஊத்தை சேது பாதிக்கப்பட்டோரிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றான்.

வட மாகாணத்தில் கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரிடமிருந்து இணையம் ஊடாக கப்பம் பெற்றதாக கிளிநொச்சி நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடிவிறாந்தின் பிரகாரம் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நிதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஊத்தை சேது என அறியப்படும் நடராஜா சேதுறூபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் நீதித்துறைக்கும் அதன் நீதிபதிகள் சிலருக்கும் அவமானம் ஏற்படுத்தும் வகையில் சேதுறூபன் இணையத்தளங்களில் செய்திகள் வெளியிட்டதாக , வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் பருத்திதுறை நீதிமன்றில் மேற்கொண்ட சமர்பணத்தை தொடர்ந்து மீண்டும் அவர் மீது திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறாது தடுக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிந்து கொண்டுள்ள நடராஜா சேதுறூபன் நீதிமன்ற உத்தரவை அவமதித்து நீதிமன்றிலோ அன்றில் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடையாது தலைமறைவாகியுள்ள நிலையில் „ என்னால் பாதிக்கப்பட்டதாக எவராவது கருதினால் நான் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்' என தெரிவித்துள்ளார்.

தன்மீது திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமையையும் தன்னை நாட்டை விட்டு வெளியேறவேண்டாம் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளமையையும் தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டுள்ளதாக தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சேதுறூபன், நீதிமன்றினால் பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமையை அறிந்திருந்தும் நீதிமன்றை அவதித்து தலைமறைவாகியிருந்தவாறு ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாகவே மேற்படி பகிரங்க மன்னிப்பை கோரியுள்ளார்.

இலங்கையின் நீதித்துறைக்கு சவாலாகவும் , கண்ணியமற்ற உதாரணமாகவும் அமைந்துள்ள இச்செயற்பாடு தொடர்பில் சட்டத்தை மதித்து செயற்படுகின்ற பிரஜைகள் பெரிதும் விசனமடைந்துள்ளதுடன் பொலிஸார் சேதுறூபன் சார்பாக செயற்பட்டு வருவதாகவும் அவரை கைது செய்வதில் தயக்கம் காண்பித்து வருவதாகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.

பொலிஸாரின் இச்செயற்பாடு மீதான மக்களின் அதிருப்தியை நீதிமன்றுக்கு தெரியப்படுத்துமாறு மக்கள் வட மாகாண சட்டத்தரணிகள் சங்கத்திடம் எதிர்பார்கின்றனர். பொலிஸார் இரு நாட்களினுள் கைது செய்யத் தவறும் பட்சத்தில் , சந்தேக நபரான நடராசா சேதுறூபனின் புகைப்படத்தினை „தேடப்படும் நபர்" என நாடுபூராகவும் சுவரொட்டிகளை பிரசுரிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்று உத்திரவிடவேண்டும் என்றும் சகல ஊடகங்களும் „இவரை கண்டுபிடிக்க உதவுமாறு" மக்களை கோரவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கையை விடுக்கபடவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவ்வாறு பிரசுரிக்கும்போது, நடராசா சேதுறூபன் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் என்பதை அறிந்து கொள்ளும் மக்கள் அவருக்கு அடைக்கலம் வழங்குவதை தவிர்ப்பதுடன் கைது செய்வதற்கு உதவியாக செயற்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments:

Post a Comment