Thursday, August 8, 2019

செஞ்சோலை மாணவர்கள் எங்கே பயிற்சி பெறுகின்றார்கள் என்பதை சிறிதரனே காட்டிக்கொடுத்தார். போட்டுடைக்கின்றார் டக்ளஸ்

புலிகளால் பலவந்த இராணுவப் பயிற்சிக்காக வள்ளிபுனம் காட்டுக்ப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மாணவர்கள் பலர் வான்தாக்குதலுக்கு உள்ளான புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் பலியாகியிருந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் வெளிவந்திருந்திருந்த நிலையில் குறித்த இராணுவ முகாம் தொடர்பான தகவலை இராணுவத்தின் இரட்டை முகவராக செயற்பட்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனே வழங்கியதாக பா.உ டக்ளஸ் தேவானந்தா இன்று பாராளுமன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பயிற்சிப் பாசறையில் இருந்து தப்பி வருவதற்கு அவர் அதற்குப் பரிகாரமாகத் தன்னிடம் கல்விகற்ற மாணவச் செல்வங்களைப் பயிற்சி முகாமில் பணயம் வைத்துவிட்டு வந்திருந்தார். இது யுத்தக்குற்றம் இல்லையா என்று கேட்கிறேன்.

சந்தர்ப்பம் பார்த்துப் புலிகளிடமிருந்து தப்பி வந்த அவர் பொதுமக்களிடம் இருந்து சேகரித்த தங்க நகைகளை அபகரித்து செஞ்சிலுவைச் சங்க வாகானத்தில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்தாரே, அந்தத் தங்க நகைகள் எங்கே? என்று கேள்வி எழுப்பிய அவர் தொடர்ந்து பேசுகையில் :

இதுவரை எம்மீது சுமத்தப்பட்டு வந்த பல்வேறு பழிகளில் இருந்து வரலாறு எம்மை விடுவித்து வந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் எம்மீது சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென அவர் ஒப்புவிக்க முடியுமானால், வெறுமனே கூச்சலிட்டுக்கொண்டிருக்காமல் உங்களுடைய அரசு, நீஙகள் கொண்டு வந்த ஆட்சி என்று கூறும் நீங்கள் அதை வைத்து ஏன் உங்களால் எம்மீதான ஒரு நீதிவிசாரணையை நடத்த முடியாமல் இருக்கின்றீர்கள்?

தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டால் நீங்கள் வாக்குகளை அபகரித்து அரசியல் பிழைப்பு நடத்தக் காரணங்கள் இல்லாமல் போய் விடும்.

அது போலவே எம்மீது அடிக்கடி அவதூறு பரப்பும் நீங்கள் எம்மீதான நீதி விசாரணையை நடத்தி அதற்கு நியாத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டால் தொடந்தும் உங்களால் எம்மீது அவதூறுகளைப் பரப்பப் காரணம் இல்லாமல் போய் விடும்.

ஆகவேதான் உங்களால் எதையும் பேசிப் பிழைப்பு நடத்த மட்டும் முடியுமே தவிர, எதையும் சாதித்துக் காட்ட வக்கற்றவர்கள் என்பதையே நீங்கள் மெய்ப்பித்து வருகிறீர்கள். உங்கள் அரசியல் பலத்தை வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தான் உங்களால் காண முடியவில்லை.

அதே அரசியல் பலத்தை வைத்து அடுத்தவர் மீதான உங்கள் அவதூறுகளுக்கு ஒரு நீதிவிசாரணையை ஆவது நீங்கள் நடத்திக்காட்டலாமே என்றுதான் உங்களிடம் சவால் விடுத்துக் கேட்கிறேன். நான் தயாராகவே இருக்கின்றேன். நடத்துங்கள் நீதி விசாரணையை!…

அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பும் இவர்கள் அதற்கு ஆதாரம் கேட்டால் துணைக்கு அழைப்பது விக்கி லீக்ஸ் இணையத்தையும் தமது பினாமி ஊடகங்களையுமே. மேற்குலக வெளிநாட்டு இராஜதந்திரிகள் இங்கு வருவார்கள். இலங்கையில் என்ன நடக்கின்றது என்று அவர்களில் சிலர் நேரில் எங்கும் சென்று ஆராய்வதில்லை.

தாம் சந்திக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் அவிழ்த்துவிடும் அடுத்தவர்கள் மீதான அவதூறுகளையே தாம் திரட்டும் தகவல் என்று கூறித் தத்தமது நாடுகளுக்கு சில ராஜதந்திரிகளை அனுப்புவார்கள். அந்தத் தகவல்களைத் திருடியே விக்கிலீக்ஸ் வெளியிட்டுப் பரபரப்புக் காட்டும்!

ஆகவே எம்மீது சேறடித்து தோற்றுப்போன விக்கிலீக்ஸ் செய்தியாளர்களான தமிழ் கட்சித் தரகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழரின் விடுதலைக்காக சிறு இறகைக்கூட இழந்திருக்காத கூரைக்கோழிகள், இன்று புலிகளின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவது ஏன் என்று கேட்கிறேன்.

மனித குல நாகரீகமே வெட்கித் தலைகுனியும் வகையில் கிளிநொச்சியில் சமூகச் சீரழிவில் ஈடுபட்டுப் புலிகள் இயக்கத்தால் கைது செய்யப்பட்ட இவர் இன்று தானும் ஒரு புலி என்று கூறி மக்களுக்கு புலுடா விடலாமா என்று நான் கேட்கிறேன்.

அண்ணன் தங்கை, அப்பு ஆச்சி, பாட்டன் பூட்டி, கட்டி வளர்த்த தமிழர் பண்பாட்டின் பாரம்பரியத்தையே வெட்கித் தலைகுனிய வைத்த விறகுக்கட்டை வீரன். தமிழர் பண்பாடு குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேச அருகதை உள்ளவரா என நான் கேட்கிறேன்.

புலிகளின் பயிற்சிப் பாசறையில் இருந்து தப்பி வருவதற்கு அவர் அதற்குப் பரிகாரமாகத் தன்னிடம் கல்விகற்ற மாணவச் செல்வங்களைப் பயிற்சி முகாமில் பணயம் வைத்துவிட்டு வந்திருந்தார்.

இது யுத்தக்குற்றம் இல்லையா என்று கேட்கிறேன். சந்தர்ப்பம் பார்த்துப் புலிகளிடமிருந்து தப்பி வந்த அவர் பொதுமக்களிடம் இருந்து சேகரித்த தங்க நகைகளை அபகரித்து செஞ்சிலுவைச் சங்க வாகானத்தில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்தாரே, அந்தத் தங்க நகைகள் எங்கே?

அதற்கு விசாரணை இல்லையா என்று கேட்கிறேன்.

ஒரு புறம் புலி முகம்! மறு புறம் சிங்க முகம்!! இரட்டை முகவராகச் செயற்பட்டு, தன்னைக் கைது செய்த புலிகள் இயக்கத்தைப் பழிவாங்க செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை புலிகளின் பயிற்சி முகாம் என அரசுக்கு தகவல் வழங்கியிருந்தார்.

இதற்கு நீதி விசாரணை இல்லையா என்று கேட்கிறேன்.

பலருக்கும் தெரியாத இரகசியம் 2009இல் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை திரை மறைவில் சந்திக்க முனைந்ததுதான். இன்றுகூடப் பேசுவது தமிழ் தேசியம்! திரை மறைவில் அரசுடன் நடத்துவது தேன்நிலவு.

இறுதியாக,..

உனது கண்களை மறைக்கும் மரக்குற்றியை அகற்றிக்கொள். பிறரது கண்களை மூடும் சிறு மரத்தூசிகள் உன் கண்களில் தெரியும்.

எம்மீது அவதூறு பரப்புவோருக்கு இதை நான் கூறிக்கொண்டு,...

இத்துடன் முடித்தாலும் தொடரும் என்று கூறி இத்துடன் விடைபெறுகின்றேன்.

No comments:

Post a Comment