Saturday, August 31, 2019

கைது செய்யப்பட்ட வைத்தியர் கொம்மாதுறையில் வைத்து கருணாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியமை வெளிச்சத்திற்கு!

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாக செயற்பட்டுக்கொண்டிருந்த சிவரூபன் என்பவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவனிடமிருந்து ஆயுதங்கள் பல மீட்டக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்தது.

சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவன் கருணாவை கொல்ல முயற்சித்துள்ளமையும் குறிப்பாக கருணாவின் கொம்மாந்துறையிலுள்ள தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். இதற்கான வேவு வேலைகளை செய்வதற்கு அவன் தன்னுடன் கடமையாற்றும் தாதி ஒருவரை பயன்படுத்தியுள்ளான்.

கருணாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட திட்டம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவன் தற்போது மட்டக்களப்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளான்.

மேலும் சிவரூபன் சில புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகளை இணைத்துக்கொள்ள முற்பட்டபோதே விடயம் பிசகியுள்ளது. கருணா போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர் என்றும் அவரை தீர்த்துக்கட்டப்போவதாகவும் குறிப்பிட்டு அவர்களின் உதவியினை கோரியுள்ளான் சிவரூபன். வுன்செயலில் ஈடுபட விரும்பாத குறித்த முன்னாள் புலிகள் விடயத்தினை உடனடியாக பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்துள்ளதுடன் சிவரூபனை கைது செய்யவும் உதவியுள்ளனர்.

No comments:

Post a Comment