Thursday, August 22, 2019

நான் அமெரிக்கனும் அல்ல, தேர்தலில் போட்டியிட தடையுமில்லை - கோத்தபாய

நான் அமெரிக்கன் அல்ல இலங்கையன் கடந்த ஏப்ரல் மாதத்துடன் இரட்டை பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளது ஆகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான எவ்வித தடைகளும் எனக்கு கிடையாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க குடியுரிமையினை கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு வழங்கப்பட்டிருந்த கடவுச்சீட்டில் இரட்டை பிரஜாவுரிமையுடையவர் எனக்குறிப்பிடப்பட்டிருந்தமை நீக்கப்பட்டு இலங்கைப் பிரஜை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அரசியல் எதிராளிகள் இவ்விடயம் தொடர்பாக தவறான கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதாகவும் குற்றஞ்சுமத்தினார் .

No comments:

Post a Comment