Thursday, August 22, 2019

இனங்களுக்கு ஏற்றவகையில் ஒரு நாட்டினுள் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது. பா. உ துமிந்த திஸாநாயக்க.

நாட்டின் சட்டத்தை இனங்களுக்கு ஏற்ப வகைப்படுத்த முடியாதெனவும் சகலருக்கு ஒரே சட்டம் நடைமுறைப்படுத்ததப்படவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கலாவ கிறிஸ்துவ தேவாலயத்திற்கு தேவையான பொருட்களை தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடடில் வழங்கி வைத்து மேற்கண்டவாறு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு மேலும் பேசுகையில் :

இங்கு கூடியுள்ள அனைவரும் மனிதர்களே எமக்கு ஒன்றாக வாழக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. அறியாமையினால் கடந்தகாலங்களில் நாம் பிளவுப்பட்டிருந்தோம். எது எவ்வாறாயினும் இடம்பெற்ற சகல தவறுகளையும் எம்மால் தடுக்க முடியாது. தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. நாடு ஒன்றில் நாம் ஒன்றாக வாழ்வதாயின் ஒரு சட்டம் காணப்பட வேண்டும். அது இனங்களுக்கென மாறுபட முடியாது. எமது கடந்தகாலங்களில் பல பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளன. எனினும் அவை எமக்கு புரியவில்லை. ஒரே சட்டம் வௌ;வேறு இனங்களுக்கு மாறுபடுவது குறித்து நாம் இதுவரை கதைக்கவில்லை. ஆனால் நாம் இன்று இது குறித்து திறந்த மனதுடன் பேசுகின்றோம். நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment