Saturday, August 24, 2019

முஸ்லிம் எம்பிக்கள் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர். முஸ்லிம்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதாம்!

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரைஸச் சேர்ந்த பைஸல் காஸிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா இருவரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேற்படி இருவரும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர்.

பதவி பிரமானம் செய்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்கள், நாட்டில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதோன்றியபோது, அனைவரும் இணைந்து ராஜனாமா செய்துகொண்டதாகவும், தற்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பைஸல் காஸிம் சுகாதார அமைச்சராகவும், அலி ஸாஹிர் மௌலானா முதன்மைத் தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்குமாறு கோரி பிரதமர் அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் பதவியேற்றுள்ளனர்.

இதேநேரம் அம்பாறை மாவட்ட எம்பி ஹரீம் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரச்சினைக்கான தீர்வு காணப்படும்வரை தான் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்:

No comments:

Post a Comment