Friday, August 16, 2019

சஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஜனாதிபதியின் ஆதரவு சஜித்துக்கு கிடைக்குமாம்...

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச களமிறங்கினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவும் கிடைக்கும் எனத் தெரியவருகின்றது.

அதுதொடர்பிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதிக்கும் ஹேமா பிரேமதாசவுக்குமிடையே நடைபெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவதற்கு ஆயத்தமாகவுள்ளதைத் தடுப்பதற்காக ஜனாதிபதி இதன்மூலம் முயற்சி செய்கின்றார் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment