Sunday, August 18, 2019

தேசியப் பட்டியலில் தனக்கும் இடம் கோருகிறார் சந்திரிக்கா அம்மையார்!

தற்போது காலியாக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தன்னை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறும், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் சந்திரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இருப்பினும், இந்த விஷயத்தில் ஜனாதிபதி ஒரு திட்டவட்டமான முடிவையும் வழங்கவில்லை எனவும் இதுதொடர்பில் எதிர்காலத்தில் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment