Saturday, August 17, 2019

நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் இரண்டு பேச்சுக்கு இடமில்லை - சஜித் அதிரடி

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன். நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் இரண்டு பேச்சுக்கே இடமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டின் தலையொழுத்தை மாற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். ஆனால் நான் ஒரு விடயத்தை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.அதாவது இம்முறை ஜனாதிபதித் தேர்த்லில் சஜித் பிரேமதாச ஆகிய நான் நிச்சயமாக வேட்பாளராக களமிறங்குவேன் என்பது மட்டுமே உறுதி. இது தொடர்பாக இரண்டு பேச்சுக்களுக்கு இனிமேல் இடம் கிடையாது.இந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து மக்கள் தீர்மானங்களை எடுக்கும்போது சில விடயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். விசேடமாக சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் நிலைமை அச்சுறுத்தல் இன்றி வாழும் சூழ்நிலை என்பன தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்.மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதோடு, தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment