Saturday, August 10, 2019

'எங்கள் வேட்பாளர் கோ....' எனும்போதே பட்டாசு கொளுத்த எல்லோரும் பார்த்திருக்கிறார்கள்!

எங்கள் வேட்பாளர் கோ....' எனும்போதே பட்டாசு கொளுத்துவதற்காக எல்லோரும் பார்த்தி்ருக்கிறார்கள். நாளைய நாள் ஆகும்வரை பெரும் எதிர்ப்பார்ப்புடன் பார்த்திருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கடுவலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு விழுந்த குழியிலிருந்துவெளியே வருவதற்காக எங்கள் முகாமின் அபேட்சகர் யார் என்பதைப் பார்ப்பதற்காக எல்லோரும் பெரும் எதிர்பார்க்கையுடன் இருக்கிறார்கள்.

நாளை 3 மணியின் பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பொதுஜன முன்னணியின் மாபெரும் வருடாந்த மாநாட்டின்போது, மகிந்த ராஜபக்ஷ பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோ.... என்று சொல்லும்போதே மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் மாநகர சபையின் குப்பைப் பிரச்சினையில் கோத்தாபய ராஜபக்ஷ எவ்வளவு சிறந்தவர் என்பது தெளிவாகின்றது என்றும், அவர் குப்பை அரசியல் செய்யவில்லை என்பதை கொழும்பு நகர சபை உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment