Monday, August 12, 2019

பாவம் கோத்தபாய... நாங்கள் இலகுவில் தோற்கடிப்போம் என்கிறார் கிரிஎல்ல

கோத்தபாய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சவாலே அல்ல என அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி மிக இலகுவில் தோற்கடிக்கத்த ஒருவராகவே கோத்தபாய ராஜபக்ஷ உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தல்களை விடவும், அதிகூடுதலான வாக்குகளால் இம்முறை கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிகொள்ளவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment