Sunday, August 11, 2019

அச்சம், பயம் இன்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழலொன்றை மீண்டும் கட்டியெழுப்புவேன் : கோத்தபாய !!

நான் இந்த நாட்டில் ஒரு போதும் அடிப்படைவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் இன்று (11) மாலை 3.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

எமது நாட்டில் பல்வேறு இனங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன. இங்கு பல்வேறு மதங்களை பின்பற்றுவோர் உள்ளனர். நாம் எப்போதும் மற்றவர்களுடைய சமயங்களுக்கு மதிப்பளித்து, ஒவ்வொருவருடைய கலாசாரங்களுக்கு மதிப்பளித்து சுமுகமாக வாழும் ஒர் இனம்.

எமது சக்தியும் இந்த ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. இந்த தாய் நாட்டில் பிறந்த எந்தவொருவருக்கும் அச்சம், பயம் இன்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழலொன்றை மீண்டும் கட்டியெழுப்புவதாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment