Thursday, August 29, 2019

வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக செயற்பட்ட ஊடகங்கள் பற்றி ஐ.நாவில் முறைப்பாடு!

குருணாகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட பிரதிநிதி அஹ்மத் ஷஹீதிடம் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினை கையளித்தவர்கள் பற்றி அவர் வெளியிடவில்லை. ஆயிரக்கணக்கான பெளத்தப் பெண்மணிகள் முஸ்லிம் வைத்தியர்களால் கருத்தடை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பொய்யாக பிரச்சாரம் செய்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பினை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்தும் ஐ.நாவுக்கு பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment