Wednesday, August 7, 2019

கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரை ரிஐடி யிடம் மாட்டி விட்ட புலம்பெயர் புலிப்பினாமிகள் !

புலிகள் வன்னியில் பூண்டோடு அழிக்கப்பட்டதுடன் புலம்பெயர் புலி வியாபாரிகளின் வருவாய் ஆட்டம் கண்டது. இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கையில் ஓர் அசமந்த நிலையை உருவாக்குவதில் அவர்கள் ஆர்வமாகவுள்ளனர். அதன் அடிப்படையில் புலம்பெயர் புலிப்பினாமிகள் நாட்டிலுள்ள துடிப்புள்ள இளைஞர்களை தவறாக பயன்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்தது.

அந்த வகையில் புலம்பெயர் புலிப்பினாமி ஒருவனால் கிளிநொச்சி ஊடகவியலாளராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிபோஜன் என்பவர் நேற்று ரிஐடி யினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டமைக்கான காரணம் அவருடன் புலம்பெயர் தேசமொன்றிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற புலிப்பினாமி தொடர்பு கொண்டமையாகும்.

நிபோஜன் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயல்கள் பலவற்றுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றார். மேலதிகமாக பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கொலை கொள்ளை போன்ற விடயங்களை துப்புத்துலக்குவதிலும் ஆர்வமாக செயற்படுகின்ற அந்த துடியாட்டமுள்ள ஊடகவியலாளனை புலம்பெயர் புலி எச்சங்கள் தொடர்பு கொண்டு தவறாக வழிநடாத்த முனையின் இழப்பானது சமுகத்திற்கேயாகும்.

சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் என்பவர்கள் சாராயப்போத்தலுக்கு தமது பேனையை அடகு வைத்துள்ள நிலையில் வழர்ந்துவரும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கவேண்டியது சமூகத்தின் கடமையாகும்.

No comments:

Post a Comment