Friday, August 23, 2019

யார் என்ன சொன்னாலும் மட்டு பல்கலையை ஜனவரி 03 இல் திறப்பேன் - ஹிஸ்புல்லா அதிரடி!

மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தை Batticaloa University எனும் பெயரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி திறந்துவைப்பேன் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்திக்கூட இந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் உடைமையாக்கிக் கொள்ளவியலாது என்றும், இங்கு எக்காரணம் கொண்டும் மார்க்கம் கற்பிக்கப்படமாட்டாது எனவும் காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற மதஅநுட்டானங்களின் பின்னர் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

என்றாலும், நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில் மக்கள் இந்தப் பல்கலைக்கழகம் பற்றித் தவறாக எடை போட்டுள்ளனர் என்றும், இங்கு இனத்துடனோ மதத்துடனோ தொடர்புடைய எந்தவொன்றும் கற்பிக்கப்பட மாட்டாது எனவும், பொறியியல், கட்டடக் கலை, விவசாயத் தொழிநுட்பம், ரொபோ தொழிநுட்பம் போன்ற பாடங்களேள அனைத்து இனத்தினருக்கும், குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் கற்பிக்கப்படும் என அந்தப் பல்கலைக்கழகம் பற்றி விவரித்தார்.
br/> உயர் கல்வி அமைச்சின் அனுமதியின்றி இவ்வாறானதொரு நிறுவனத்தை உருவாக்க இயலும் எனவும், இலாப நோக்கற்ற இந்தப் பல்கலைக்கழகத்திற்காக சகலவித அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன எனவும் முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

'பல்கலைக்கழகம் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் பல்கலைக்கழகத்தின் முக்கியமான பதவிகள் பலவும் சிங்கள பெளத்த விரிவுரையாளர்களிடமே செல்லும். அரசாங்கம் கூறும் நிபந்தனைகளின் கீழ் நாங்கள் கல்வி கற்பிப்பதற்குத் தயாராகவே உள்ளோம். இங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பாடத்திட்டம் தொடர்பில் நாங்கள் 2017 இல் உயர் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.

குடிசார் பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்), இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கட்டடக் கலை, சட்டம், உல்லாசப் பிரயாண மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் உள்ளிட்ட பாடங்கள் எங்களால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment