Sunday, July 7, 2019

மக்களின் நம்பிக்கையை சிதைத்த அரசாங்கமே உடனடியாக பதவி விலகு! ஜேவிபி பாதச் சமர்.

ஐக்கிய அமெரிக்க உள்ளிட்ட உலக வல்லரசுகளிடம் நாட்டைக் காட்டிக்கொடுக்கிகின்ற , வரிச் சுமையாலும் விலையேற்றத்தினாலும் மக்களை வதைக்கின்ற, துறைமுகம், எண்ணெய் குதங்கள், நிலம் உள்ளிட்ட மக்களுக்கு சொந்தமான வளங்களை வெளிநாடுகளுக்கு பலி கொடுக்கினற அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியால் இன்று „மக்களின் நம்பிக்கையை சிதைத்த அரசாங்கமே உடனடியாக பதவி விலகு' என்ற சுலோகத்துடன் „பாதச்சமர்' ஒன்று ஆரம்பமானது.

களுத்துறை நகரத்திலிருந்து ஆரம்பமான குறித்த பாதச்சமர் மொரட்டுவையை வந்தடைந்ததுடன் நாளை அங்கிருந்து புறப்பட்டு நுகேகொடையை அடையும் என்றும் நுகேகொடையில் மா பெரும் ஜனத்திரள் மத்தியில் இலங்கை அரசை பதவிவிலகக்கோரும் மக்கள் செய்தி விடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பநாந்தோட்டை எங்களது துறைமுகம் அன்று கொடுத்தார்கள் அதை அடிமாட்டு விலைக்கு..

இப்போது கொடுகின்றார்கள் கொழும்பு ஜெட்டியை இந்தியாவை சந்தோஷப்படுத்த..

புல்மோடைக்கும் நாக்கை கொங்கப்போடுகின்றார்கள் ஹகட்ட ஹகாட்டத் விலைபேசுகின்றார்கள்..

காணிகளுக்கு வேலைக் கொடுத்து விட்டார்கள்...

எண்ணைகுதங்களையும் கொடுக்கப்போகின்றார்கள்..

நாளாந்த செலவைக் கொண்டு செல்ல நாட்டின் வளங்களை விற்கும் அரசே.. வெட்டமில்லையா வெளியேறு..

மக்களின் உயிர்கள் மீது அக்கறையில்லாதிருந்த அரசாங்கம் எதற்கு எங்களுக்கு வெறியேறுங்கள் தாமதமின்றி..

மக்களை பலிக்காடாக்கள் ஆக்குவார்கள்..

தங்களுக்கு குண்டுபுகா வாகனம் கொண்டுவருவார்கள்..

பயித்தியம் ஆடுவார்கள் மத்திரிகள் அமைச்சர்கள்.. போதும் ஆடியது போங்கள் வீட்டுக்கு..

அக்க்ஷா , சோபா ஒப்பந்தங்களை கைச்சாத்திடுகின்றார்கள் , நாட்டை பலி கொடுக்கின்றார்கள் ஜேஆர் இன் வாரிசுகள்..

யுத்தத்துக்கு இடம்கேட்கிறார்கள்.. ரணிலும் மைத்திரியும் தொடை நடுங்குகின்றார்கள்..

என்று கோஷமிட்டவாறு கொட்டும் வெயிலில் ஆயிரக்கணக்கான மக்களுடன் மொறட்டுவையை வந்தடைந்த பாதச் சமரில் கலந்து கொண்டவர்கள், இப்படியே போனால் நாடு முடிந்துவிடும் விரைவில்.. அனுப்புவோம் இவர்களை விரைவில் வீட்டுக்கு என்று வானுயரக் கத்தினர்.






No comments:

Post a Comment