Thursday, July 4, 2019

படையினரின் தடையை மீறி பாடசாலையினுள் நுழைய முனைந்த நபர் சுட்டுக்கொலை.

பாடசாலை ஒன்றின் முன்னால் பாதுகாப்பு கடமையில் நின்றிருந்த இராணுவ வீரர் ஒருவரின் கட்டளையை மீறி பாடசாலையினுள் நுழைய முனைந்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அக்கீமன பிரதேசத்தில் இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் இராணுவத்தினால் வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

குறித்த நபர் பாதுகாப்புக்கு நின்றிருந்த சிப்பாயின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் உயிரிழந்த 39 வயதுடைய நபரின் மகள் சுகயீனமுற்றிருப்பதாக பாடசாலை நிர்வாகத்தினர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த நபர் இராணுவத்தினரின் கட்டளையை மீறிச் சென்றபோதே சம்பவம் நிகழந்ததாக அறியக்கிடைக்கின்றது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment