Wednesday, July 3, 2019

கொலை அச்சுறுத்தல்! ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜர்

நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த முறைப்பாடு தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கந்தசாமி இன்பராச என்ற நபர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு ஹிஸ்புல்லா அங்கு ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா தனக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கந்தசாமி இன்பராசா என்பவர் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அவர் திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

No comments:

Post a Comment