கிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெறவுள்ளது.
அமைப்பினுள் அண்மையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக நிர்வாக உறுப்பினர்கள் , அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களுடன் விரிவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கலந்துரையாடும் பொருட்டு அமைப்பின் தலைவர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களால் இப்பொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுக்கூட்டத்தின்போது அமைப்பின் எதிர்காலச்செயற்பாடுகள் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள பொதுமக்கள் யாவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காலம் : 21.07.2019 பிற்பகல் 14.00
இடம் : Lindenstrasse 33,
2540 Grenchen
No comments:
Post a Comment