Tuesday, July 9, 2019

பூஜித – ஹேமசிறிக்கு பிணை! தீர்ப்பை எதிர்த்து சட்ட மா அதிபர் மீள் பரிசீலனை மனுத்தாக்கல்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியதான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிணைக்கு எதிராக சட்டமா அதிபரால் மீள் பரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment