Wednesday, June 19, 2019

மூன்றாவது நாளாக தொடர்கின்றது உண்ணாவிரதம்! கோடீஸ்வரன் கருணாவும் களத்தில்.

கல்முனை வடக்கு என்று அழைக்கப்படுகின்ற பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கோரிகைக்கையை முன்நிறுத்தி கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோர் உண்ணாவிரம் இருந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த உண்ணா விரதத்தில் கலந்து கொள்வதற்கும் ஆதரவு தெரிவிப்பதற்குமாக தற்போது முன்னாள் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பா.உ கோடீஸ்வரன் ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகள் கல்முனை மாநகர சபையின் பல உறுப்பினர்கள,; பொது மக்கள் என இன்று குறித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

நேற்று போராட்டக்காரர்களுடன் அம்பாறை மாவட்ட அரச அதிபர், மேலதிக அரச அதிபர், கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடினார்கள். 'எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம்' என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எது எவ்வாறாயினும் குறித்த பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் நபரொவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளிவரும்வரை தரமுயர்த்தல் செயற்பாடு நிகழமுடியாத நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப்போராட்டடமானது அர்த்தமற்றதாகவே முடிவுறும் என சட்ட மற்றும் நிர்வாக சேவை நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.





No comments:

Post a Comment