Friday, June 21, 2019

கல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தூதர்களாக கல்முனை சென்ற பா.உ சுமந்திரன் , மனோகணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் அங்கிருந்த மக்களினால் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியை சுமந்திரன் வாசிக்க முனைந்தபோது மக்கள் எதிர்கோஷம் செய்து தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

மேற்படி பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமயோசிதமாக செயற்பட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். மிகுந்த தோல்வியுடன் வந்த உலங்குவானூர்தியில் அவர்கள் கொழும்பு திரும்பியுள்ளனர்.

இதேநேரம் நாளை ஞானசார தேரர் அவ்விடத்திற்கு விரையவுள்ளதாக இலங்கைநெட் அறிகின்றது. மேலிடத்து உத்தரவு ஒன்றின் பெயரில் அங்கு விரையும் தேரர் உண்ணாவிரமிருக்கும் மங்களாராம விகாராதிபதிக்கு பால் ஊட்டி உண்ணாவிரத்தினை நிபந்தனையுடன் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.




No comments:

Post a Comment