Saturday, June 29, 2019

இலங்கையர்கள் எவரும் சவுதியில் மரணித்தால், நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க ஒப்பந்தம்.

சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் எவரும் மரணித்தால், அவர்களுக்கான நஷ்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சவுதி அரேபிய சட்ட நிறுவனம் என்பன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இதன்படி மூன்றாம் தரப்பொன்றின் கவனயீனமான காரணங்களுக்காக, சவுதி அரேபியாவில் மரணிக்கின்ற இலங்கையர்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கான வழக்குகளை துரிதமாக ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரசானது அங்கு தொழில் புரியும் தொழிலாளிகளின் உரிமைகளை தொடர்ந்து மீறிவருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

No comments:

Post a Comment