Saturday, June 8, 2019

தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் பிரதானி இராஜனாமா!

தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின்போது சாட்சியமளித்ததன் பின்னர் சிசிர மென்டிஸ் தனது பதவியை ராஜனாமா செய்து கொண்டுள்ளார்.

சிசிர மென்டிஸ் சாட்சியமளிக்கும்போது, குறித்த தாக்குதல் தொடர்பாக தமக்கு ஏப்ரல் 8ம் திகதி புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்ததாகவும் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு தரப்பிற்கும் கட்டளையிடும் அதிகாரம் தனக்கு இருக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இருந்தபோதும், தனக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தான் உடனடியாக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுவாக இருந்தாலும் நீண்டகால பொலிஸ் துறையில் அனுபவமுள்ள சிசிர மென்டிஸ் குறித்த பதவிக்கு தகுதி அற்றவர் என்பது அவர் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது தெளிவானது என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment