Wednesday, June 19, 2019

சரியான வேட்பாளரை சரியான நேரத்தில் தெரிவிப்போம் என்கின்றார் மஹிந்தர்.

எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் என சுயாதீன தேர்தல்கள் அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்து வருகின்றார்.

அதேநேரம் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த தரப்பு வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பலர் பல்வேறு விதமாக ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக கருத்து தெரிவித்த போதிலும், இன்னும் உறுதியாக வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

வேட்பாளர் சம்பந்தமாக சரியான தருணத்தில் தெரிவிப்பதாகவும், எவ்வாறாயினும் முன்நிறுத்தப்படும் வேட்பாளர் சந்தேகமின்றி ஜெயிப்பார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment