Friday, June 21, 2019

சபாநாயகருக்கான ஆலோசகருக்கு அமெரிக்கா ஊதியம் வழங்குகின்றது. போட்டுடைக்கின்றார் கம்பன்பில

இலங்கையில் அமெரிக்கா அதிதீவிரமாக கால்பதித்து வருகின்றது. சீனாவின் உறவினை தடுக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு தனது ஆதிக்கத்தை இலங்கையில் அதிகரிக்கவும் தனக்கு வேண்டிய அரசொன்றை நிறுவவும் அமெரிக்கா முயற்சிக்கின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் இலங்கையின் சபாநாயகரான கரு ஜெயசூரியவின் ஆலோசகர் ஒருவருக்கு அமெரிக்க நிறுவனம் ஊதியம் வழங்குகிறது என்றும் அதனை சபாநாயகர் ஏற்றக் கொண்டிருக்கிறார் என்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

இச்செயற்பாடானது கருஜெயசூரியவிற்கும் அமெரிக்காவுக்கும் இரகசியத் தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் போன்றே சபாநாயகர் செயற்படுகிறார் என கம்பன்பில சாடியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது மேற்கண்டவாறு தெரிவித்த பா.உ கம்பன்பில அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம் போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக சிறிலங்கா மாறி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான மிலேனியம் சவால் நிதிய ஒத்துழைப்பு உடன்பாடு ஒரு பொருளாதார தாழ்வாரத்தை உருவாக்கி விடும். அது பனாமா கால்வாயைப் போன்று சிறிலங்காவைப் பிளவுபடுத்தி விடும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment