Wednesday, June 26, 2019

நால்வருக்கு மரண தண்டனை நிறைவேறுகின்றது. ஜனாதிபதி கையொப்பம்!

போதைப்பொருள் வியாபாரத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு மிகவிரைவில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான இறுதி கையொப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபால இட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதனை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமானதாகும். இலங்கை ஓர் பௌத்த நாடு என்ற அடிப்படையில் பௌத்த மத போதனைகளுக்கு மரண தண்டனை முரண்பாடானது என்ற அடிப்படையில் கடந்த பல வருடங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக அனுபவித்து வந்த நிலையில், தற்போது போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவுக்கு ஆதரவாகவும் எதிரானதாகவும் விவாதங்கள் தோன்றியுள்ளது.

எது எவ்வாறாயினும் மேற்படி நால்வருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தினர் மிக இரகசியமாக மேற்கொண்டுவருவதாக அறியக்கிடைக்கின்றது.

No comments:

Post a Comment