Friday, June 21, 2019

ஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.

சர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சிக் கல்லூரிக்கென அரசகாணி மற்றும் அரச வளங்களைப் பெற்று சூட்சுமமாக காய்களை நகர்த்திய ஹிஸ்புல்லா, இவ்விடயத்தில் பிரதானமாக இலங்கை முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் ஷரியா சட்டத்தினை போதிக்கும் பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்க என இலங்கை முஸ்லிம்களை அராபியரிடம் அடகு வைத்த ஹிஸ்புல்லா, அப்பணத்தினை தனது சொந்த முதலீடாக மாற்றியுள்ளார்.

ஆனால் ஷரியா பல்கலைக்கழகம் என்ற போர்வை போர்த்தப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தினூடாக ஹிஸ்புல்லா இந்நாட்டின் இலவசக்கல்விக்கு ஆப்பு வைப்பதற்கே முயற்சித்தார் என்ற உண்மையை இந்நாட்டின் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் யாவரும் உணர மறுக்கின்றனர்.

இலவசக்கல்விக்கு எதிரான மேற்படி தனியார் பல்கலைக்கழகங்கள் யாவும் அரச நிறுவனங்களாக மாற்றப்பட்டு இலங்கையில் இலவசக்கல்வி முறை வலுப்பெறவேண்டும் என்று போராடவேண்டிய நிலையில் குறித்த பல்கலைக்கழகம் ஷரியா நீதியை கற்பிக்க முயன்றமையால் சவால்களை எதிர்நோக்குகின்றது என்ற தோற்றத்தை உருவாக்கி ஹிஸ்புல்லாவின் கொள்ளைக்கு துணை நிற்கின்றனர் என்பது கவலைக்குரியது.

No comments:

Post a Comment