Friday, June 21, 2019

பயங்கரவாத சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை.

கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தகுந்த காரணங்கள் எதுவுமின்றி கைது செய்யப்பட்ட ஆறு பேர் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் குழுவின் தலையீட்டினால் நேற்று (20) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறையை சேர்ந்த மூவரும், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், கம்பளையைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாகும்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத செயப்பாட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தகுந்த காரணம் எதுவுமின்றி கடந்த மே மாதம் 13ஆம் திகதி கண்டி கலேகெதர பிரசேத்தில் வைத்து 06 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை இன்றி விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சம்மாந்துறையை சேர்ந்த மூன்று நபர்களையும் விடுதலை செய்வதற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிரினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இயங்கிவரும் கட்சியின் சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையிலான சட்டத்தரணி குழுவினருக்கும் குறிப்பாக இது விடயத்தில் களத்தில் நின்று பாடுபட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிருக்கும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களும் விடுதலை செய்யப்பட்ட இளைஞர்களும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

( எஸ்.அஷ்ரப்கான்).

No comments:

Post a Comment