Sunday, May 19, 2019

வன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.

வடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களை சந்தித்ததோடு வன்னிப் படையினரினால் பயங்கரவாத தாக்குதலுக்கெதிராக பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் சட்டம் ஒழுங்குகளுக்காக தனது பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தற்போதய கடின சூழ்நிலைகளில் வன்னி மக்களின் பாதுகாப்புக்காக வன்னி பாதுகாப்பு தலைமையகத்தினால் எடுக்கப்பட்ட உச்சகட்ட முயற்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்பினைப்பற்றியும் எடுத்துக் கூறி மெச்சியுள்ளார்.

வன்னி இராணுத் தளத்திற்கு சென்று படையினரை பாராட்டியுள்ள குறித்த எம்பி அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் பேசும்போது மேற்படி கருத்தக்கு எதிரான கருத்துக்களையே முன்வைப்பார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

எவ்வாறாயினும் மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துகளுக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகள் அல்லது குண்டுவெடிப்புகளை இல்லாதொழிக்க படையினர் தொடந்தும் தங்களது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவர் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அங்கு ஏற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் படையினர் அவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றபோது, படையினரின் பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் கெடிபிடிகளை அரசு நிறுத்தவேண்டும் என தமிழ் மக்களை உணர்ச்சி ஊட்டுவற்காக பாசாங்கு செய்வார் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியதாகும்.



No comments:

Post a Comment