Sunday, May 5, 2019

ஆலோசகராக இருக்க முடியாதாம், அதிகாரமே வேண்டுமாம் பொன்சேகாவுக்கு.

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படவேண்டும் என நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுதல் விடுத்து வந்தது.

ஜனாதிபதி மைத்திரிபாலவினால் அப்பதவியில் அவரை இருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரப்பட்ட நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை சாதகமாக பயன்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியினர், இஸ்லாமிய தீவிரவாதத்தை அடக்குவதற்கு சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியதுடன், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

நிலைமைகள் கருத்திலெடுத்த ஜனாதிபதி பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கும் அவரை தேசிய பாதுகாப்பு சபைக்கு அனுமதிப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். அதேநேரம் அமைச்சராக நியமிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனினும், சரத் பொன்சேகா எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றும் தனக்கு அமைச்சுப்பதவியே வேண்டும் என்றும் அடம்பிடிப்பதாக அறியமுடிகின்றது.

நாட்டின் பாதுகாப்பில் ஓட்டைகள் விழுந்துள்ளதாக கருதப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் என்னைவிட பாதுகாப்பு நிபுணர்கள் எவரும் இல்லை என மார்தட்டும் பொன்சேகா நாட்டின் நலன்கருதி முன்மொழியப்பட்ட பதவியை பாரமெடுக்கவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment