Monday, May 6, 2019

பயங்கரவாதிகள் இறுதி பயிற்சியை மேற்கொண்ட இடம் நுவரேலியாவில் மாட்டியது.

தடைசெய்யப்பட்டுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும், கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் உட்பட 36 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் இன்று ( 06.05.2019) சுற்றிவளைத்துள்ளனர்.

அம்பாறை சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் உட்பட 36 பேர் வரையில் இங்கு பயிற்சி பெற்றுள்ளதாகவும் கடந்த 21 ம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ம் திகதி தாக்குதலுகான இறுதி பயிற்சியை இந்த கட்டிடத்திலே மேற்கொண்டுள்ளதுடன் குறுகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடத்தை குத்கைக்கு பெற்றுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது.

இவ்விடத்திலேயே தற்கொலை தாரிகள் இறுதி பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் நம்புகின்றனர்.



No comments:

Post a Comment