Tuesday, May 21, 2019

பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை, ஆனால் புலனாய்வு சேவை தொடரும். இலங்கை விடயத்தில் சீனா உறுதி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் சீனாவுக்குச் சென்றிருந்தார். அதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் சில ஒப்பந்தங்கள் கைச்சாந்தானது. இவ்வொப்பந்தங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்குள் ஊடகங்களில் வெளிவந்தன.

இக்கருத்துக்கள் தொடர்பாக கருத்துரைத்துள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம், சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உடன்பாடுகள், பாதுகாப்புக் கருவிகள் விநியோகம் மற்றும் இராணுவத்தினருக்கான பயிற்சிகள் போன்ற அடிப்படை காரணிகளை மாத்திரமே உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது:

கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் தொடர்ந்து தெரிவிக்கையில், கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள் இரகசியமாக மூடி மறைக்கப்படவில்லை. சிறிலங்கா தொடர்பான சீனாவின் கொள்கை நிலையானது. அதே கொள்கைளைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம்.

இந்த பாதுகாப்பு உடன்பாடுகளின் அடிப்படையில் சிறிலங்காவில் சீனா தனது புலனாய்வு சேவைகளை நிறுத்தவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.


'சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, நீதியமைச்சர்தலதா அத்துகோரள, அமைச்சர் தயா கமகே ஆகியோர் முன்னிலையில் இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.



No comments:

Post a Comment