Sunday, May 12, 2019

சமூக வலைத்தளத்தில் இனவாத பதிவு. சிலாபத்தில் ஊரடங்குக்கு வித்திட்டது.

சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுபடுத்தும் பொருட்டு சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிடப்பட்ட பதிவு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட குளப்பநிலை பிரதேசத்தில் நிலைiமைகளை மோசமடையவைத்துள்ளது என அறியக்கிடைக்கின்றது.

இதன் விளைவாக சிலாபம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவினை இட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்:

No comments:

Post a Comment