Friday, May 3, 2019

ஹிஸ்புல்லாவை பதவி விலக்க கோரி மல்லிகை மொட்டு மந்திரி சத்தியாக்கிரகம்.

கிழக்கு மாகாண ஆழுனராகவுள்ள எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாவிற்கும் இலங்கையில் பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கந்தளை பிரதேச சபையின் பொது ஜன பொரன உறுப்பினர் ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆழுனர் பதிவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்யவேண்டும் என சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதேநேரம் ஹிஸ்புல்லா மலேசியா செல்ல மேற்கொண்ட முயற்சி ஒன்றை இறுதி நேரத்தில் ரத்து செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மலேசியா பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொண்டிருந்தார்.

பயண ஒழுங்குகள் அனைத்தும் சரியான பின்னர், ஜனாதிபதியின் அனுமதிக்காக அவரது பயண விவகாரம் சென்றபோது, பயணத்திற்கு ஜனாதிபதி அனுமதியளிக்கவில்லை என தகவல்கள் கசிந்துள்ளது.

No comments:

Post a Comment