Sunday, May 5, 2019

நீர்கொழும்பில் இனமுறுகல். வாகனங்கள், கடைகளுக்கு சேதம். ஊரடங்கு அறிவிப்பு

நீர்கொழும்பு பிரதேசத்தில் இனங்களுக்கிடையேயான மோதல் நிலை ஒன்று உருவானதையடுத்த நீர்கொழும்பு பொலிஸ் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தினுள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 6 மணியிலிருந்து நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பிரதேசத்திலுள்ள இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கே இனமுறுகலுக்கு காரணமானது என அறியமுடிகின்றது. ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வாள்வெட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். அவ்வாறு வாள்வெட்டுக்கு ஆளானவர்கள் பின்னர் தமது ஆட்களுடன் வெட்டியவர்களது பிரதேசத்திற்கு படையெடுத்து சேதம் விளைவித்துள்ளனர்.

இதன்போது வாகனங்களுக்கும் சில கடைத் தொகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நிலைமைகளை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்:





No comments:

Post a Comment