Tuesday, May 7, 2019

பயங்கரவாதிகள் யாவரும் கொல்லப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டுள்ளார்களாம்- கூறுகின்றார் பதில் பொலிஸ் மா அதிபர்

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் உயிரிழந்து அல்லது கைது செய்யப்பட்டு இருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் பொதுமக்களின் வாழ்க்கை படிப்படியாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாக்கப்படுவதாகவும், அவற்றை நம்பி செயற்பட வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறுகிய காலத்தில் அனைவரையும் அடையாளம் காண பொலிஸாருக்கு முடிந்ததாவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்திய குழுவில் குண்டு தயாரிப்பதில் பரீட்சியம் பெற்ற இரண்டு பேர் இருந்ததாகவும், அவர்கள் தற்போது அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

தாக்குதலுடன் நேரடியாக தொடர்பு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment