Wednesday, May 1, 2019

புலிகள் எக்காலத்திலும் நம்பத்தகாதவர்கள் என்ற அபிமானம் பெற்றுக் கொடுத்ததுதான் பிறேமதாஸவின் கொலை. ஸ்ரேன்லி ராஜன்

இலங்கை மிகசிறிய தீவு, சிங்கள எண்ணிக்கையும் அதிகம் அல்ல ஆனால் மிக சிறந்த ராஜ தந்திரிகள் எல்லாம் அங்கு உருவானார்கள்

தங்கள் நாட்டுக்கு ஆபத்து வந்தபொழுதெல்லாம் அற்புதமாக முறியடித்தார்கள். அவர்கள் வரம் அப்படி. பண்டாராநாயக காலத்திலிருந்து புலிகளை வீழ்த்திய ராஜபக்சே வரை அவர்களின் நாட்டுபற்று துணிவும் அலாதியானது

ஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர்

அந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச‌

மிக மிக ஒடுக்கபட்ட ஏழை இனத்திலிருந்து தன் அயாராத உழைப்பில் பெரும் இடத்திற்கு சென்றார். அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் அமைதிபடை இலங்கை சென்றது

அதை எதிர்த்த முதல் அரசியல்வாதி பிரேமதாச, ஆனால் இந்தியா பயிற்சி கொடுத்த போராளிகளை இந்தியாவின் படைகொண்டே அடக்கும் தந்திரத்தினை கையாண்ட ஜெயவர்த்தனேவினை அவரால் மீறமுடியவில்லை

பின் ஜெயவர்த்தனேவுக்கு பின் அதிபரான பிரேமதாச அதிரடி ஆட்டம் ஆடினார்.

ஜெயவர்த்தனே அமெரிக்க அடிமை. பிரேமதாச ஒருவித சோஷலிஸ்ட் என்பதால் அமெரிக்காவினை அவர் விரும்பவில்லை. இந்தியா, அமெரிக்கா (சீனா அன்று களத்தில் இல்லை) என எந்த நாட்டுக்கும் கட்டுபடாத இலங்கையினை அவர் நிர்மானித்தார்

அதில் அவர் காட்டிய ராஜதந்திரம்தான் இந்திய படைகளை வெளியேற்றுவது. இந்தியா அங்கு முகாம் நிரந்தரமாக அமையும் முடிவில் இருந்தது. புலிகளை நொறுக்கி கிட்டதட்ட முடிக்கும் நிலைக்கு வந்தது

ஒரு இலங்கை அதிபராக பிரேமதாச இந்திய படைகள் தங்குவதை விரும்பவில்லை, விரும்பவும் முடியாது. யாரும் எதிர்பாரா வகையில் புலிகளுடன் கை கோர்த்தார்

ஆயுதங்களை அள்ளிகொடுத்தார், கப்பல் கப்பலாக கொடுத்தார்

சோர்ந்திருந்த புலிகளும் பிரேமதாசாவினை பிடித்து கொண்டு, "இது அண்ணன் தம்பி பிரச்சினை, ஏய் இந்திய நாய்களே வெளியேறுங்கள்.." என கத்தவும் தவறவில்லை

சிங்களருடன் புலிகள் கைகோர்ப்பது கனவிலும் நடக்காது என நம்பிய இந்தியா அதிர்ந்தது, ஆயினும் இந்தியா போராடியது

சிங்களரும் புலிகளும் கைகோர்த்தபின் இந்திய படைகளுக்கே மனம் வெறுத்தது, ச்சீ இவர்களை காக்கவா வந்தோம் என மூத்த தளபதிகளே மனம் வெறுத்தனர்

மண்டியிடா மானம், வீழ்ந்துவிடா புலி வீரம் எல்லாம் பிரேமதாசா முன் குப்புற கிடந்தது

பின் அமைதிபடை மீட்கபட்டது, புலிகளுக்கும் வடக்கு கிழக்கு முழுக்க கொடுக்கபட்டது. பிரேமதாச அதில் கைவைக்கவில்லை

புலிகள் விஷயத்தில் அவர் வேகம் காட்டவில்லை, இந்த நாட்டை இந்தியாவிடம் இருந்து மீட்டவர்கள் என்ற அபிமானம் அவருக்கு இருந்தது, பிரிவுபடா இலங்கைக்குள் தமிழருக்கு தீர்வுகொடுக்கவும் அவரிடம் திட்டம் இருந்தது.

ஆனால் அமெரிக்க எதிர்ப்பு அவருக்கு இருந்தது. அமெரிக்க எதிரிகள் எங்கிருந்தாலும் வாழமுடியாது அல்லவா?

ராஜிவினை புலிகள் அப்பொழுதுதான் கொன்றிருந்தனர். எக்காரணம் கொண்டும் தன் மீது புலிகள் பாயமாட்டார்கள் என மலைபோல் நம்பி இருந்தார் பிரேமதாச‌

புலிகளின் உயிரை மீட்டு கொடுத்த என்னை புலிகள் ஏன் தொடபோகின்றார்கள் என அவரின் பாதுகாப்பு தளர்த்தபட்டது

நம்பியவரை கொல்வதில் புலிகளின் படிப்பு ஆராய்ச்சிபடிப்பிற்கும் அப்பாற்பட்டது

அப்படி இதே மே தின ஊர்வலத்தில் கொழும்பில் மனித வெடிகுண்டால் கொல்லபட்டார் பிரேமதாச‌

பிரேமதாசவும், ராஜிவும் பிராந்திய எதிரிகள் என்றாலும் அடிப்படை ஒற்றுமை அமெரிக்க எதிரிகள்

அதனாலே அமெரிக்க கைகூலிகளால் கொல்லபட்டார்கள்

இப்படி பெருந்தலைவகளை எல்லாம் மனிதவெடிகுண்டை அனுப்பி தங்கள் பலத்தை வெளிகாட்டிய புலிகளால் , மிக இக்கட்டான 2009ல் ராஜபக்சே நிழலையும் தொடமுடியாமல் போயிற்று

சுருக்கமாக சொன்னால் பின்னாள் இலங்கை அதிபர்கள் புலிகளை எப்படி கையாள வேண்டும் என செத்து பாடம் கொடுத்தவர் பிரேமதாச‌

இதற்குபின்புதான் சிங்கள தரப்பு புலிகளை சுத்தமாக நம்பவில்லை, ஒருகாலமும் நம்பதகாதவர்கள் புலிகள் எனும் அபிமானம் அவர்களுக்கு இதே நாளில்தான் வந்தது

இலங்கை வரலாற்றில் துணிச்சல் மிக்க அதிபர் பிரேமதாச, அவரின் நடவடிக்கை எல்லாம் இலங்கைக்கானது, இறுதியில் இலங்கைக்காக உயிரையும் விட்டார்

இன்று அவரின் நினைவு தினம்

பிரேமதாசாவிற்கு காட்டிய நன்றிகடனை பின்னாளில் ராஜபக்சேயிடம் வட்டியும் முதலுமாக வாங்கினர் புலிகள்

அந்த தீவு தேசம் அந்த தியாக தலைவனுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றது



No comments:

Post a Comment