Friday, May 3, 2019

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலருக்கு எதிரான வழக்கை 21 திகதி விசாரணைக்கு எடுக்க முடிவு.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

நீதிபதிகளான புவனேக அளுவிகார, ப்ரீதி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று சட்டமா அதிபர் இதன்போது நீதிமன்றில் கூறினார்.

இதனையடுத்துமனுவை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியளார் கூறினார்.

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தெரிவித்து அவர்களுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment