Friday, May 31, 2019

சொந்த மகளை 12 வயதிலிருந்து 3 வருடங்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜேவிபி வேட்பாளர்.

ரத்தனபுர பிரதேசத்தில் கடந்த தேர்தலில் ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியின் போட்டியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது மகளை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அப்துல் றஹீம் மொஹமட் ஹனாஸ் எனப்படும் நபரே தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகளை 12 வயதிலிருந்து தொடர்ந்து 3 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

லியானுதீன் பாத்திமா என்ற யுவதியிடம் ரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது இவ்வதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ரத்தினபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் ஹனாஸ், தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அறியக் கிடைக்கின்றது.


No comments:

Post a Comment