Saturday, April 27, 2019

நிந்தவூரில் வெடிகுண்டு நிரப்பிய வாகனம். வெடிக்க வைக்க திண்டாடுகின்றது STF

நேற்று சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை தொடர்ந்து நிந்தவூரில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்கியிருந்த வீடொன்று கண்டு பிடிக்கப்பட்டன் அவ்வீட்டின் அருகில் வெடி குண்டு நிரப்பிய வாகனம் ஒன்று தரித்து நிறுத்தப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்திலுள்ள குண்டினை வெடிக்க வைக்கும் பொருட்டு பிரதேசத்திலுள்ள மக்கள் யாவரும் வெளியேற்ளப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள் பள்ளிவாயல்களிலும் பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவ்விடத்திற்கு செல்லும் அரசியல்வாதிகளை பார்த்து மக்கள் ஆத்திரமடைவதை அவதானிக்க முடிகின்றது.

செயற்கை அதிர்வினை செலுத்தி குண்டினை வெடிக்கவைக்க விசேட அதிரடிப்படையினர் பலமுறை முயன்றும் அது பயனளிக்காத நிலையில் நாளை மாற்று முறை ஒன்றினை பயன்படுத்தி வெடிக்க வைக்க உள்ளதாக அறியமுடிகின்றது.

நாளை சிறியரக குண்டு ஒன்றினை வாகனத்தின் கீழே வைத்து வெடிக்கவைத்து குண்டினை நாசம் செய்யும் முறையினை கையாளவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது:

கல்முனை பிரதேசத்தில் பாரிய அழிவினை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட குண்டு வாகனமே இதுவென அறியமுடிகின்றது.

இக்குண்டு நிரப்பிய வாகனம் மற்றும் 7 மேற்பட்ட தற்கொலைத்தாக்குதல்கள் கல்முனையில் இடம்பெற்றிருக்குமாக இருந்தால் ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

குறித்த பயங்கரவாத குழுவினரால் இவ்வாறான புதிய வாகனங்கள் பல அண்மையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







No comments:

Post a Comment