Wednesday, April 24, 2019

பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு செயலரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்.

இடம்பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பாக போதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் , அத்தாக்குதல்களை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதற்கு நேரடிப்பொறுப்புக் கூறவேண்டிய பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு செயலரையும் கைதுசெய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் பாராளுன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச.



எது எவ்வாறாயினும் இக்கடிதம் பாரமளிக்கப்படுவதற்கு முன்னரே பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்புச் செயலரையும் பதவிகளிலிருந்து ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தது.

இதன் பின்னணியில் புதிய பாதுகாப்பு செயலராக முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் சுயாதீன ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதால், ஆணைகுழுவிடம் முறையிட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment