Monday, April 8, 2019

விக்கி- கஜேந்திரர்கள் குடும்பிப்பிடி. நான் நள்ளிரவில் களவாகச் சென்று சீனர்களை சந்திக்கமாட்டேன். விக்கி நக்கல்.

வடமாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்ற விக்கினேஸ்வரன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு கலப்பு நீதிமன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என தெரிவித்து வந்தவர்.

தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து அந்தர் பல்டி அடித்து முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான குழுவின் சிபார்சினை அடிப்படையாக கொண்டதோர் விசாரணைக்குழுவை ஆரம்பிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

மேற்படி சிபார்சானது வெற்றுப்பேப்பர் என்றும் அது வலுவற்றது என்றும் பேசப்பட்டு வந்த நிலையில் அவ்வாறானதோர் சிபார்சினை ஏற்றுக்கொள்ள விக்கினேஸ்வரன் தூண்டுவது அரசை காப்பாற்றும் செயல் என பல்வேறு கட்சிகள் விக்கினேஸ்வரன் மீது சீறிப்பாய்ந்திருந்தது.

இந்நிலையில் விக்கினேஸ்வரனின் மேற்படி துண்டுதல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மணிவண்ணன் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை விக்னேஸ்வரன் தொடர்ந்தும் வலியுறுத்தினால், அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்திருந்தார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், நள்ளிரவில் சென்று சீனர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று கிண்டல் அடித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மணிவண்ணனுடைய அவ்வாறானதொரு பேச்சை தான் அறியவில்லை. 'என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் அம்பலத்துக்கு வராத அந்தரங்கங்கள் இருந்தால் அவற்றை அறிய நானும் ஆவலாய் இருக்கின்றேன். நள்ளிரவில் சீனர்களைப் போய்ச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை' என்றும் பதிலளித்தார்.

இலங்கையில் செயற்படும் சகல அரசியல் கட்சிகளுக்கும் ஒவ்வொரு பின்புலத்தை காட்டி நயவஞ்சகப் பிரச்சாரம் மேற்கொள்வதையே தமிழ் தேசிய முன்னணி தமது அரசியல் வியூகமாக கொண்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு நாட்டுடன் அல்லது புலனாய்வு பிரிவுடன் பிணைத்து விடுவார்கள்.

ஆனால் தாங்கள் அவ்வாறான சகல தரப்பினருடனும் ரகசியமாக தொடர்பில் இருந்து பணத்தினை பெற்றுக்கொள்கின்றார்கள் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. கடந்தவாரம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன தூதர் தலைமையிலான குழுவினரை இரகசியமாக இரவில் விளக்கள் அணைக்கப்பட்டதோர் சூழ்நிலையில் சந்தித்து பேசியுள்ளனர். அங்கு பெட்டிகள் மாறப்பட்டதாகவும் அறியக் கிடைக்கின்றது.

அவ்வாறேதான் கடந்தமுறை ஜெனீவாவிற்கு சென்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வட மாகாண ஆழுனருடன் ஒட்டி உறவாடி விட்டு ஊடகங்கள் அவற்றை கண்டுகொண்டபோது முழிபிதுங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விக்கியுடன் இணைந்து பணியாற்றவேண்டும் அன்றேல் உங்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என தமிழ் தேசிய முன்னணியினருக்கு புலம்பெயர் நிதிவழங்குனர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே மேற்படி குடுப்பி பிடி ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment